கொழும்பு குருந்துவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனும் மாணவியும் கொழும்பு கொம்பனிதெருவில் உள்ள சொகுசு குடியிருப்பு கட்டிடத்தின் 67வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த மாணவியும், மாணவனும் ஒரே வகுப்பில் படித்து வருகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து இருவரும் குதித்து 3வது மாடியில் விழுந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.