BREAKING

உள்நாட்டு செய்தி

நுவரெலியாவில் அரச வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியாவில் அரச வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியா பிரதான நகரில் உள்ள அரச வங்கி ஊழியர்கள் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக ஒன்றினைந்து சம்பள உயர்வைக் கோரி நேற்று மதிய நேரத்தில்  (04) அடையாள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

எமது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்
அரச வங்கி ஊழியர்களுக்கு வரிச்சுமைக்கு ஏற்ற சம்பளம் ஒன்றை உடன் பெற்றுத்தருக , ஏனைய அரச ஊழியர்கள் போல் எங்களுக்கு அனைத்து சலுகைகளும் பெற்று தாருங்கள் , அரச வங்கிகளின் சம்பள அதிகரிப்பை உடன் உயர்த்துங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எனவே அரசாங்கம் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க விட்டால் நாடு முழுவதும் சென்று பாரிய போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்,

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!