BREAKING

உள்நாட்டு செய்தி

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டில் கைதிகளை பார்வையிட விசேட சலுகை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டில் கைதிகளை பார்வையிட விசேட சலுகை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் கைதிகளை குடும்பத்தினர் அல்லது விருந்தினர்கள் திறந்தவெளியில் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் காமினி திசாநாயக்க அறிவித்துள்ளார்.

அதன்படி, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் திறந்தவெளியில் பார்வையிட அனுமதிக்கப்படும்.

இந்த வருகைகளின் போது, ​​ஒவ்வொரு கைதியும் தங்கள் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவு, இனிப்புகள் அல்லது சுகாதாரப் பொருட்கள் அடங்கிய பொதியை பெறவும் அனுமதிக்கப்படுவார்கள்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!