BREAKING

உள்நாட்டு செய்தி

விவசாயிகளுக்கு வெளியான பெரும் மகிழ்ச்சியான செய்தி

விவசாயிகளுக்கு வெளியான பெரும் மகிழ்ச்சியான செய்தி

பல விவசாய சங்கங்களின் கோரிக்கைகளுக்கு இணங்க, விவசாயிகளுக்கு நிதி நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்கும் நோக்கில் விவசாயிகள் பெற்ற அனைத்து பயிர்க் கடன்களையும் உடனடியாக தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

குறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்றைய தினம் (03) வெளியிட்டுள்ளது.

விவசாய சங்கங்கள் பலவும் விடுத்த கோரிக்கைகளை ஏற்று விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவு வழங்கும் வகையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும் கடந்த மாத தொடக்கத்தில் சிறு நெல் விவசாயிகளுக்கு நடப்பு பயிர்ச்செய்கைப் பருவத்துக்காக இரண்டு ஏக்கர் வரையிலான ஏக்கருக்கு 15,000 ரூபா வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!