காலியில் வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை வாக்களிப்பு நிலையத்திற்கு வந்த அவர், தனது வாக்குச்சீட்டை பெற்றுக்கொண்டு வாக்களித்த பின்னர், அதனை புகைப்படம் எடுக்கும் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.