லொறி விபத்து – நால்வ பலி

பதுளை, சொரணதொட்ட பகுயில் லொறியொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (05) இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் மொனராகலை ஹுலந்தாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கட்டட நிர்மாண நிறுவனமொன்றின் பணியாளர்கள் என்பதுடன் பஸ் தரிப்பிடத்தை நிர்மாணிப்பதற்காக சென்ற போது லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Exit mobile version