BREAKING

உள்நாட்டு செய்தி

புகையிரதத்தில் தீ

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி இன்று (03) காலை பயணித்த பொடிமெனிக்கே புகையிரதத்தின் பின் இயந்திரம் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு அருகில் திடீரென தீ பிடித்து எரிந்ததாக ஹப்புத்தளை புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார்.

இன்று முற்பகல் 10.50 மணியளவில் தீ பரவியதாகவும் அதன் பின்னர் ஹப்புத்தளை புகையிரத நிலைய ஊழியர்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு நிலைய ஊழியர்களும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்திற்கான காரணம் அல்லது ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!