BREAKING

உள்நாட்டு செய்தி

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது – நவம்பரில் பொதுத் தேர்தல்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது - நவம்பரில் பொதுத் தேர்தல்

இன்று(25) பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடனான வர்த்மானி வெளியான நிலையில் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதுடன், நவம்பர் மாதம் 21ஆம் திகதி புதிய நாடாளுமன்ற அமர்வு கூடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, அக்டோபர் 4 முதல் 11ஆம் திகதி நண்பகல் வரையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!