BREAKING

உள்நாட்டு செய்தி

பம்பலப்பிட்டியில் நடு வீதியில் கவிழ்ந்த பஸ் – 2 பெண்கள் உட்பட 7 பேர் காயம்

கவிழ்ந்த பஸ் - 2 பெண்கள் உட்பட 7 பேர் காயம்

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டூப்ளிகேஷன் வீதி, ஜூபிலி புல்லஸ் சந்திக்கு அருகில் இன்று (14) அதிகாலை பஸ் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

போக்குவரத்து சமிஞ்சையை மீறி குறித்த பஸ் கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த போது தும்முல்ல திசையிலிருந்து வந்த லொறியுடன் மோதி கவிழ்ந்ததில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தின் போது பேருந்து முற்றாக கவிழ்ந்து சேதமடைந்ததாகவும் லொறியின் முன் பக்கம் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் போது பஸ்ஸில் சுமார் 15 பயணிகள் இருந்துள்ளதுடன் அவர்களில் இரண்டு பெண்களும் ஐந்து ஆண்களும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!