BREAKING

உள்நாட்டு செய்தி

பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்ளும் தபால் ஊழியர்கள்

பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்ளும் தபால் ஊழியர்கள்

சுகயீன விடுமுறையில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்ச்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை (12)நள்ளிரவு முதல் 13ம் திகதி நள்ளிரவு வரை இந்த சுகயீன விடுமுறை வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

13ம் திகதி காலை முதல் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து தபால் அலுவலகங்களை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தபால் திணைக்களம் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளது.2000 ஊழியர் வெற்றிடம் காணப்படுவதால் நான்கு வருடங்களாக பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லையென ஒன்றிணைந்த தபால் தொழிற்ச்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் ஊழியர்கள் பாரிய வேலைப்பளுவிற்கு உள்ளாகியுள்ளனர். வெற்றிடம் காரணமாக மக்களுக்கான சேவைகளை சரிவர நிறைவேற்றுவதிலும் அசௌகரியம் ஏற்ப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!