சீரற்ற காலநிலையால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மாற்றம் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படும் இடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி உடனடியாக நகருமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இடர் முகாமைத்துவ நிலையம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

மேலும், தமக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் பொருட்களை மாத்திரம் எடுத்துக்கொண்டு, பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான அவசர நிலைமைகளின் போது அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன அதன்படி அவசர தொலைபேசி இலக்கம் :- 117, இடர் முகாமைத்துவ நிலையம் :- 0112136222 / 0112670002 / 0112136136, காவல்துறை :- 0112421111 என்ற இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version