கரையோர ரயில் சேவையில் தாமதம்

கரையோர ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திற்கும் கட்டுக்குருந்த ரயில் நிலையத்திற்கும் இடையில் சாகரிகா விரைவு ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் போக்குவரத்து இவ்வாறு தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version